மஹியங்கனை விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

by Staff Writer 10-11-2020 | 12:24 PM
Colombo (News 1st) பதுளை - மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. மெடித்தலை சந்திக்கருகில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியும் அவரது மனைவியும் 06 வயதான சிறுவனும் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.