இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு 

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு 

by Bella Dalima 10-11-2020 | 7:23 PM
Colombo (News 1st) இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று பதிவாகின. இராஜகிரிய பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்த 51 வயதானவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர், COVID-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு 10 ஐ சேர்ந்த 45 வயதான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 23 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், COVID-19 காரணமாக ஏற்பட்ட சுவாசத் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார். கம்பஹா மாவட்டம் உடுகம்பொலவை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் கம்பஹா மாவட்ட மருத்துவமனையில் கடந்த 9 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், COVID-19 காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் காணப்படாத நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்றிருப்பது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.