நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 09-11-2020 | 4:07 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மக்கள் அவதானம் செலுத்தி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.