கொரோனா தொற்றிலிருந்து மேலும் 562 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 562 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 08-11-2020 | 6:13 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 562 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 5,100 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 13,419 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.