5,711 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல்

சட்டவிரோதமாக கொண்டுவரப்படவிருந்த 5,711 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றல்

by Staff Writer 07-11-2020 | 5:22 PM
Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்படவிருந்த 5,711 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் இருவர் இலங்கையர்கள் என்பதுடன், ஏனைய நால்வரும் இந்திய பிரஜைகளாவர். கைதான 26 மற்றும் 28 வயதான இலங்கையர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியை சேர்ந்தவர்களென கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். உலர்ந்த மஞ்சள், மீனுக்குள் மறைத்து வைத்து கடத்தப்படவிருந்தமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்தியர்களையும் அவர்கள் பயணித்த படகையும் நாட்டின் கடல் எல்லையிலிருந்து வௌியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.