கைக்குண்டு, கூரிய ஆயுதங்களுடன் 7 பேர் கைது

களுத்துறையில் கைக்குண்டு, கூரிய ஆயுதங்களுடன் 7 பேர் கைது

by Staff Writer 07-11-2020 | 10:56 AM
Colombo (News 1st) களுத்துறை - ஹீனட்டியங்கல பகுதியில் கைக்குண்டு மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து கைக்குண்டொன்றும் 04 வாள்களும் 06 கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் குறித்த பொருட்களுடன் காரில் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்