கொரோனா தொற்றிலிருந்து மேலும் 537 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 537 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 07-11-2020 | 3:56 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 537 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணம​டைந்தோரின் எண்ணிக்கை 7,723 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 5,217 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 12,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இதுவரை 30 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.