82கழிவுக்கொள்கலன்களை பிரித்தானியா அனுப்ப நடவடிக்கை

82 கழிவுக் கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

by Staff Writer 06-11-2020 | 10:18 AM
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய மேலும் 82 கொள்கலன்களை இன்று மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவை மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார். கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்கள் அண்மையில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இவற்றில் கடந்த வாரத்தில் 20 கொள்கலன்கள் பிரித்தானியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்