கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம் முதல் அறிமுகம்

by Staff Writer 06-11-2020 | 10:07 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. Antigen பரிசோதனை தொகுதிகள் ஆய்வுக்கூடத்தில் சோதனைக்குட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் மூலம் Antigen பரிசோதனைத் தொகுதி நாட்டிற்கு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வுக்கூடம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். Antigen சோதனையினூடாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை விரைவாக அடையாளம் காண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.