நாட்டில் 12,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 12,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 05-11-2020 | 8:47 AM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,187 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (04) 443 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொ​டைத கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே ​நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் குறித்த கொத்தணிகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8709 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 6305 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து மேலும் 277 பேர் நேற்று குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5858 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, 24 ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியது.