மன்னாரில் கிராமசேவகர் ஒருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 04-11-2020 | 12:12 PM
Colombo (News 1st) மன்னார் - கள்ளியடி பகுதியில் கிராமசேவகர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு 8 மணியளவில் இலுப்பைக்கடவை - ஆத்திமோட்டை பிரதான வீதியின் கள்ளியடி பகுதியில், சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடமைகளை நிறைவு செய்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிய கிராம உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் தலையில் காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார், இவர் கொலை செய்யப்ட்டிருக்கலாம் என சந்தேகம் வௌியிட்டுள்ளனர். மன்னார் - கள்ளியடியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 54 வயதுடைய கிராம உத்தியோகத்தரின் சடலமே மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்