English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Nov, 2020 | 11:45 am
Colombo (News 1st) இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுமதி பெற்ற தொழிற்சாலைகளை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கு, ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கட்டட நிர்மாண நடவடிக்கை, கடற்றொழில், விவசாயம், கைத்தொழில் துறைகள் மற்றும் ஏனைய தொழிற்சாலைகள் ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சாலை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளை நடாத்திச் செல்ல, பொலிஸாரினால் விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் தொழிற்சாலைகள் தமக்கான அனுமதியை பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, [email protected] எனும் இணையத்தள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
19 Apr, 2022 | 11:11 AM
28 Mar, 2022 | 03:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS