பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

by Staff Writer 03-11-2020 | 6:43 PM
Colombo (News 1st) பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற பேரவைக்கு தமது பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரேரிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு நேற்று அறிவித்தார். இதற்கு சபாநாயகரின் அனுமதி இன்று கிடைத்ததுடன், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ளார். 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற சபையின் கட்டமைப்பு மாற்றம் பெறுவதுடன், பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி, சபாநாயகரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோர் அதில் அங்கம் வகிக்கின்றனர்.