நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவாகியது 

நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவாகியது 

by Staff Writer 03-11-2020 | 7:27 PM
Colombo (News 1st) நாட்டில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு - 15 பகுதியில் நேற்று (02) தனது வீட்டில் உயிரிழந்த குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. காயச்சல், தடிமன் மற்றும் தொண்டை வலியினால் பாதிக்கப்பட்டிருந்த பெண், நுரையீரல் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.