கண்காணிப்பு நடவடிக்கையில் 14 பொலிஸ் குழுக்கள்

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 14 பொலிஸ் குழுக்கள் 

by Staff Writer 03-11-2020 | 10:55 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 14 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 14 பேரின் தலைமையில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனடிப்படையில், இன்று (03) முதல் குறித்த குழுக்கள் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளனர்.