வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு

வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு

by Staff Writer 02-11-2020 | 11:11 AM
Colombo (News 1st) நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் பேராசிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு அண்மித்த நாடான இந்தியாவில் ஏற்பட்ட வளி மாசடைவு மற்றும் நாட்டின் வளிமண்டல எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மாசடைவு ஆகியன இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் பேராசிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். தூசு துகள்களின் செறிவு 100 முதல் 150 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சுவாச ​நோயாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்