புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் நாளை திறப்பு

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் நாளை திறப்பு

by Staff Writer 02-11-2020 | 9:47 PM
Colombo (News 1st) புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் நாளை (03) திறக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு வீதிகளின் மொத்த விற்பனை நிலையங்கள் நாளை அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.