by Staff Writer 01-11-2020 | 4:12 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது, எதிர்வரும் 09 ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், எஹலியகொட மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளிலும் குருநாகல் மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலும் நாளை (02) அதிகாலை 05 மணி முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி கூறினார்.