நீரில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 01-11-2020 | 1:34 PM
Colombo (News 1st) நாச்சிக்குடா கடலில் நேற்றைய தினம் (31) மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கிய நிலையில் சக மீனவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். நாச்சிக்குடாவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.