நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவாகியது

நாட்டில் மற்றொரு கொரோனா மரணம் பதிவாகியது

by Staff Writer 01-11-2020 | 9:27 PM
Colombo (News 1st) நாட்டில் 21 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. வெலிசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மஹர பகுதியை சேர்ந்த 40 வயதான ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நபர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாச தொகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், உயிரிழந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மேற்கொண்ட இரண்டாவது PCR பரிசோதனையில் அவர் கொரோனா நோயாளர் என கண்டறியப்பட்டதாக தொற்றுநோய் ஆய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.