தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு

நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு

by Bella Dalima 31-10-2020 | 2:12 PM
Colombo (News 1st) நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 25 வயதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறைக்கூடத்தில் இருந்த போதே இன்று காலை சந்தேகநபர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், தங்கச்சங்கிலியொன்றை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபரை தடுத்து வைத்த சிறைக்கூடத்தில் மேலும் 4 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார். சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். உயிரிழந்த சந்தேகநபரின் பிரேத பரிசோதனைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளன. அத்துடன், சிறைக்கூடத்தில் அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.