இதுவரை 10,561 பேருக்கு கொரோனா தொற்று 

இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,561 ஆக அதிகரிப்பு

by Staff Writer 31-10-2020 | 8:05 PM
Colombo (News 1st) இன்றைய தினம் மேலும் 137 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,561 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மேலும் 117 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர். அதன்படி, நாட்டில் குணமடைந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4399 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 20 ஆவது கொரோனா மரணம் இன்று பதிவானது.