இதுவரை 9,791 பேருக்கு கொரோனா தொற்று 

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,791 ஆக அதிகரிப்பு

by Staff Writer 30-10-2020 | 1:57 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 586 பேர் நேற்று (29) அடையாளங்காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் COVID-19 தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 6,313 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,791 ஆக பதிவாகியுள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 5,660 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,142 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.