by Staff Writer 30-10-2020 | 5:22 PM
Colombo (News 1st) அம்பாறை - திருக்கோவிலில் 08 துப்பாக்கிகளுடன் 07 சந்தேகநபர்கள் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருக்கோவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் திருக்கோவிலைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
20, 33, 40, 45, 55 மற்றும் 57 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடியிலிருந்து துப்பாக்கியொன்றும் வாள் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரினரால் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப்பிரினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சவுக்கடி கடற்கரையினை அண்டிய பகுதியில் உள்ள பற்றைக் காட்டிற்குள் உரப் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருந்துள்ளன.