அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு உத்தரவு

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு உத்தரவு

by Staff Writer 30-10-2020 | 1:38 PM
Colombo (News 1st) அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு மேல் மாகாணத்திலும் ஏனைய பிரதான நகரங்களிலுமுள்ள அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்தே பணியாற்றும் செயற்றிட்டத்தின் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டு அத்தியாவசிய மற்றும் ஏனைய சேவைகளைத் திட்டமிட்டு செயற்படுத்துமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிரூபம் ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் நேற்று இரவு வௌியிடப்பட்டது. காலை ​8.30 முதல் மாலை 4.15 வரை கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் குறித்த சுற்றுநிரூபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.