by Staff Writer 30-10-2020 | 2:04 PM
Colombo (News 1st) புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கை விமானப்படையின் 18 ஆவது விமானப்படை தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரண, கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவராவார்.