துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ கணேசன் அறிவிப்பு

by Staff Writer 29-10-2020 | 12:56 PM
Colombo (News 1st) துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.