இதுவரை 9,205 பேருக்கு கொரோனா தொற்று

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு

by Staff Writer 29-10-2020 | 8:18 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் 414 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 5,111 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,075 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றினால் 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.