by Staff Writer 28-10-2020 | 11:30 AM
Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்றிரவு 7.35 அளவில் அமெரிக்காவிற்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் நாட்டை வந்தடைந்தார்.