உறுப்புரிமை நீக்கத்திற்கு இடைக்காலத் தடை

மணிவண்ணனின் யாழ். மாநகர சபை உறுப்புரிமையை நீக்கும் தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

by Staff Writer 28-10-2020 | 4:32 PM
Colombo (News 1st) சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் யாழ். மாநகர சபை உறுப்புரிமையை நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்திற்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் 14 நாட்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை யாழ். மாவட்ட நீதிபதி வி.ராமக்கலன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.