நாட்டில் மேலும் 211 பேருக்கு COVID-19 தொற்று

நாட்டில் மேலும் 211 பேருக்கு COVID-19 தொற்று

by Staff Writer 28-10-2020 | 10:21 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 211 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்ட 09 பேருக்கும், ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையோர் பட்டியலில் காணப்பட்ட 202 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,081 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 4,987 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, 4,075 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.