கம்பளை பழைய பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு

கம்பளை பழைய பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 28-10-2020 | 6:34 PM
Colombo (News 1st) கம்பளை பழைய பாலத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கம்பளை பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் தலையில் காயங்கள் காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். வெலிமடையை சேர்ந்த 37 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.