by Staff Writer 27-10-2020 | 1:51 PM
Colombo (News 1st) நாட்டில் 17 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
ஜா-எல பகுதியை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதுவரை 293 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் 17 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களும் இதில் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் 180 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.