by Staff Writer 27-10-2020 | 4:42 PM
Colombo (News 1st) இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ். கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன் கட்சியின் உறுப்புரிமை பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாக த.ஐங்கரன் கூறியுள்ளார்.
வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், தவிசாளர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் CVK.சிவஞானத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வட மாகாண சபையில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்தே தாம் பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்ளத் தீர்மானித்ததாக த.ஐங்கரன் நியூஸ்ஃபெஸ்டுக்கு தெரிவித்தார்.