கொழும்பின் சில பகுதிகளில் PCR சோதனை

கொழும்பின் சில பகுதிகளில் PCR சோதனை

by Staff Writer 27-10-2020 | 12:42 PM
Colombo (News 1st) கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் இன்று PCR சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மட்டக்குளி சமித்புர,தெட்டகொடை, பொரளை, சுவர்ணா வீதி, வைத்தியா வீதி ஆகிய பகுதிகளில் PCR சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் தினுகா குருகே குறிப்பிட்டார். கொழும்பு நகரில் நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட PCR சோதனையூடாக 200 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

ஏனைய செய்திகள்