by Fazlullah Mubarak 26-10-2020 | 12:06 PM
2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று வௌியாகவுள்ளன.
இந்த வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தினூடாக வெளியிடப்படவுள்ளன.
இம்முறை 41,500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
மருத்துவபீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட சில துறைகளுக்கு இம்முறை அதிக மாணவர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்
2019 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய நடாத்தப்பட்டது.