ஸ்பெய்னில் அவசரநிலை பிரகடனம்

ஸ்பெய்னில் அவசரநிலை பிரகடனம்

by Staff Writer 26-10-2020 | 2:45 PM
Colombo (News 1st) ஸ்பெய்னில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் ஸ்பெயின் அரசு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் (Pedro Sánchez) அறிவித்துள்ளார். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிராந்தியங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 15 நாட்களுக்கு மாத்திரம் அமுல்படுத்தப்படவிருந்த குறித்த கட்டுப்பாடுகளை 6 மாதங்கள் வரை நீடிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அனுமதி பெறவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தொற்று பரவியதை அடுத்து ஸ்பெயினில் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தொற்று பரவுவதால் தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஸ்பெய்னில் இதுவரை 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரானா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 35000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.