மருந்துகளை விநியோகிக்கும் திட்டத்தின் 2ஆம் கட்டம்

மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் 

by Staff Writer 26-10-2020 | 7:59 PM
Colombo (News 1st) களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கிளினிக் நோயாளர்களின் வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில் கிளினிக்களில் சிகிச்சை பெறும் மாதத்துக்கு போதுமான மருந்துகள் இல்லாத நோயாளர்களுக்காக மருந்துகளை விநியோகிக்கும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கட்டம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தபால் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உரிய வைத்தியசாலைக்கு அழைப்பினை மேற்கொண்டு தகவல்களை பதிவு செய்வதன் மூலம் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்