பொதுமக்கள் நடமாடும் இடங்களில் தொற்று நீக்கம்

கொழும்பில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் தொற்று நீக்கம் 

by Staff Writer 26-10-2020 | 4:29 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாடும் இடங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை நிறுவனத்துடன் இணைந்து இலங்கை பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்த வகையில் இந்த தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புறக்கோட்டை மெனிங் சந்தை, மத்திய பஸ் தரிப்பிடம், பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடம், நான்காம் மற்றும் ஐந்தாம் குறுக்கி வீதிகளில் தொற்று நீக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையம், நீதிமன்ற கட்டட தொகுதி, பொதுச்சந்தை, பஸ் தரிப்பிடங்கள், மீன் விற்பனை நிலையங்களில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலுமுள்ள பொது இடங்கள் மீண்டும் தொற்று நீக்கப்பட்டுள்ளன.