புறக்கோட்டை உள்ளிட்ட 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட 4 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் 

by Staff Writer 25-10-2020 | 2:36 PM
Colombo (News 1st) கொழும்பின் மேலும் 4 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் இன்று (25) மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.