by Staff Writer 25-10-2020 | 5:20 PM
Colombo (News 1st) இன்றிரவு (15) சேவையில் ஈடுபடும் காலி தபால் ரயில் தவிர்ந்த அனைத்து தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பயணிகளின் வருகையை கருத்திற்கொண்டு பல்வேறு ரயில் மார்க்கங்களில் 16 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் ரயில் மார்க்கத்தினூடான 8 ரயில் சேவைகளும் களனி ரயில் மார்க்கத்தில் இரண்டு ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.