கானாவில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலி

கானாவில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலி

by Staff Writer 24-10-2020 | 5:07 PM
கானா நாட்டில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலியாகியுள்ளனர். கிழக்கு கானாவின் அக்யேம் பதாபியில் கட்டுமானப் பணியில் இருந்த 3 அடுக்குமாடி தேவாலயம் கடந்த செவ்வாய்க்கிழமை இடிந்து வீழ்ந்துள்ளது. இதில் 11 பெண்கள் உட்பட 22 பேர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி பலியானார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தின் போது சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் தேவாலயத்தில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.