by Bella Dalima 23-10-2020 | 3:37 PM
Colombo (News 1st) ஹட்டன் நகரிலுள்ள மீன் விற்பனை நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நகரிலுள்ள 05 மீன் விற்பனை நிலையங்களினதும் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக ஹட்டன்- டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர் இராமையா பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன் நகரிலுள்ள ஒரு மீன் விற்பனை நிலையத்தின் வியாபாரிகள் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றிருந்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த இரண்டு மீன் வியாபாரிகளையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.
அவர்களுக்கு PCR சோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன் நகரிலுள்ள ஏனைய 04 மீன் கடைகளிலுள்ள விற்பனையாளர்கள் ஏனைய பகுதிகளில் மீன் கொள்வனவு செய்த போதிலும், தற்பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்களின் கடைகளும் மூடப்பட்டுள்ளதாக ஹட்டன்- டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.