ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அபயாராமயவில் அவசர கலந்துரையாடல்

by Staff Writer 21-10-2020 | 9:09 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அபயாராமயவிற்கு செல்வதற்கு முன்னர், கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தேர்தல்களின் போது ஒழுக்கத்தை மீறிய பிரதேச சபை உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளுக்கு மத்திய குழு ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்ததால், அந்த விடயங்கள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடியதாக இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.