பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 21-10-2020 | 1:02 PM
Colombo (News 1st) பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பேலியகொடை மீன் சந்தை இன்றைய தினம் (21) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, வியாபாரிகளுக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.