பூகொட முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

பூகொட பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

by Staff Writer 21-10-2020 | 10:47 AM
Colombo (News 1st) பூகொட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளிட்ட மேலும் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 12 ஆம் திகதி பூகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் வௌிநபர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட பூகொட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் நீதியான முறையில் தமது கடமையை நிறைவேற்ற தவறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை பொலிஸார் ஒருபோதும் பின்வாங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.