துப்பாக்கிச் சூட்டில் மாகந்துரே மதுஷ் உயிரிழப்பு 

by Staff Writer 20-10-2020 | 5:55 AM
Colombo (News 1st) மாளிகாவத்தை - எப்பல்வத்த பகுதியில் இன்று (20) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த சுற்றிவளைப்பின் போது, 22 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 02 கைத்துப்பாக்கிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.