குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 20-10-2020 | 3:22 PM
 Colombo (News 1st) குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை, இன்று மேலும் 60 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 35 பேர் கட்டுநாயக்கவிலுள்ள இரண்டு தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.