கிம்புலாஎலே குணாவுடன் தொடர்புகளை பேணிய ஒருவர் கைது

கிம்புலாஎலே குணாவுடன் தொடர்புகளை பேணிய ஒருவர் கைது 

by Staff Writer 20-10-2020 | 12:08 PM
Colombo (News 1st) கொழும்பு - கிரேண்ட்பாஸ், சேதவத்த பகுதியில் ஹெரோயின் விற்பனையுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தற்போது வௌிநாட்டிலுள்ள 'கிம்புலாஎலே குணா' என்றழைக்கப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.