ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரி கைது

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது

by Staff Writer 19-10-2020 | 3:13 PM
Colombo (News 1st) ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் புத்தளம் - சேனைக்குடியிருப்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான சந்தேக நபரிடமிருந்து 40 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சந்தேக நபர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவரென சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.